காலா வியாபாரத்தில் கடுமையான ரிஸ்க்
30 மே, 2018 - 20:05 IST
தனுஷின் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. 'காலா' ரிலீஸுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் 'காலா' படத்தின் தமிழ்நாட்டு ஏரியாக்களின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
சென்னை சிட்டி உரிமையை சத்யம் சினிமாவின் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கோயம்பத்தூர் ஏரியா உரிமையை திருப்பூர் சுப்பிரணியன் வாங்கியுள்ளார். மதுரை ராமநாதபுரம் ஏரியா உரிமையை பைனான்சியர் அன்பு செழியனும், சேலம் ஏரியா உரிமையை '7G' சிவாவும் வாங்கியுள்ளார்.
இந்த நான்கு ஏரியாக்கள் தவிர மற்ற ஏரியாக்களின் வியாபாரம் இன்னும் சில தினங்களில் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.
காலா படத்தின் தமிழ்நாடு ஏரியாக்களின் விலை அதிகமாக சொல்லப்பட்டதால், யாருமே அவுட்ரைட்ஸ், எம்.ஜி. அடிப்படையில் வாங்க முன்வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையிலேயே வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருவேளை காலா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றால், விநியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment