ம் ஆண்டு 14- வது உலகக் கோப்பை தொடர் இத்தாலியில் நடைபெற்றது.
இந்தத் தொடர் விறுவிறுப்பாகவே தொடங்கியது. முதல் ஆட்டத்திலேயே கத்துக்குட்டியான கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த கேமரூன் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து 2-வது சுற்றில் கால்பதித்தது. அந்த அணியின் வெற்றியில் 38 வயதான ரோஜர் மிலா பிரதான பங்குவகித்தார்.
அந்த அணியின் வெற்றிக்கு கால் இறுதியில் இங்கிலாந்து அணி முற்றுப்புள்ளி வைத்தது.
மேற்கு ஜெர்மனி - நெதர்லாந்து அணிகள் இடையிலான கால் இறுதி சுற்றுக்கு முந்தைய ஆட்டத்தில் வீரர்கள் இடையிலான மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு ஜெர்மனி வீரரான ரூடி வோலருடன், நெதர்லாந்தின் முன்கள வீரரான பிராங்க் ரிஜ்கார்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், இருமுறை ரூடி மீது எச்சில் உமிழ்ந்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமாக மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து கால் இறுதியில் செக்கோஸ்லோவியாவையும், அரை இறுதியில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது மேற்கு ஜெர்மனி.
மறுபுறம் அர்ஜென்டினா அணி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் யுகோஸ்லோவியாவையும், அரை இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும் பந்தாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது முறையாக பட்டம் வென்றது. 1986 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவிடம் அடைந்த தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் மேற்கு ஜெர்மனி பதிலடி கொடுத்தது. அந்த உலகக் கோப்பையில் ஆனந்த கண்ணீர் சிந்திய அர்ஜென்டினாவின் டிகோ மரடோனா இம்முறை ரோம் நகரில் கண்ணீர் ததும்ப சோகமயமாக மைதானத்தில் இருந்து வெளியேறி னார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment