இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையில் கோப்பையை வெல்வோம் என்று தனக்கே உரிய விதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் பெருப்பாலான சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணிக்கு வந்ததில் இருந்தே தமிழலில் அவ்வப்போது ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை ஹர்பஜன் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சிஎஸ்கே அணியினர்: கோப்புப்படம்
ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்தபின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழலிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து வருகிறார்.
இந்நிலையில், புனேயில் நேற்று ஐபிஎல் போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் நடந்தது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக ஹர்பஜன் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்க டீமூக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது
அன்ப கொட்டிக்கொடுக்கிற தமிழ்நாட்டுக்கு உயிரக்குடுத்தாச்சும்
கப் ஜெயிச்சு பெருமை சேக்கனும்ங்கிற பயம் நிறைய இருக்கு. ஒரே ஒரு ஆசைதான். ஐபிஎல் முடியும் போது “தல” (தோனி)கைல கப் இருக்கனும். ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கனும்
இவ்வாறு ஹர்பஜன் ட்வீட் செய்துள்ளார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment