வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகல்!
May 1, 2018
வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விற்றார். சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உருவானது. அதாவது தனிநபர் சம்மந்தப்பட்ட தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் ஆய்விற்காக விற்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன.
இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க், தவறுகளுக்கு நானே முழுப்பொறுப்பு என மன்னிப்பு கோரினார். இந்த சமயத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஜான் கோம் இடம்பெற்றிருந்தார். ஆனால் தற்போது ஜான் கோம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்துள்ள பிரச்சனைகள் தான் ஜான் கோமின் இந்த முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
[ad_2]
Source link

No comments:
Post a Comment