வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் புதிய ஆப்
May 31, 2018
யோகா குருவான பாபா ராம்தேவ் ‘கிம்போ’ எனும் புதிய ஸ்மார்ட் போன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்தியா முழுவதும் அங்காடிகளில் விற்பனை செய்து வருகிறது. அந்நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியில் தொழில்நுட்ப பொருட்களை களமிறக்கியுள்ளது. இதில் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் 4ஜி சிம் கார்டுகளை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இதற்கு ‘சுதேசி சம்ரதி’ (Patanjali Swadeshi Samriddhi SIM card) என பெயரிடப்பட்டுள்ளது.
144 ரூபாய்-க்கு அளவில்லாத கால்களும், 2GB டேட்டா அளவிற்கு இணைய வசதியை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ஜியோவை போன்று அதிரடியாய் தனது திட்டங்களை அறிவித்துள்ளது. மேலும் இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் ரூ. 5 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு மற்றும் ரூ. 2.5 லட்சத்துக்கு விபத்து காப்பீடு அகியவை சிம் கார்டுடன் தரப்படுகிறது. இந்த சிம் கார்டை பயன்படுத்தி பதஞ்சலி பொருட்களை 10% தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இத்தனை அதிரடி அடங்குவதற்குள், தனது அடுத்த அதிரடியாக வாட்ஸ் ஆப்பிற்கு சவால் விடும் ‘கிம்போ’ எனும் புதிய ஸ்மார்ட் போன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ‘பதஞ்சலி’ நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் #SwadeshiMessagingplatform எனும் ஹாஷ்டேகில் வாட்ஸ் ஆப்பிற்கு போட்டிதான் இந்த ‘கிம்போ’ என்றும் கூறியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ‘பதஞ்சலி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
[ad_2]
Source link

No comments:
Post a Comment