‘மதுரவீரன்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பணிகளுக்காக இங்கிலாந்து சென்ற விஜயகாந்த் இளையமகன் சண்முக பாண்டியன் சென்னை திரும்பியுள்ளார். கடந்த 7 மாதங்களாக லண்டனில் இருந்த அவர் விஜயகாந்தின் 40 ஆண்டுகால கலைத்துறை சேவைக்கான விழா நடந்த போது ஊரில் இல்லை. அதனால், சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்த நாட்களில் தனது புதிய படமான ‘தமிழன் என்று சொல்’ படத்துக்கான லொக்கேஷன் தேர்வுகளில் கவனம் செலுத்தி வந்தார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக மீண்டும் லண்டன் புறப்பட உள்ளார் சண்முக பாண்டியன்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment