காவிரிக்காக சென்னையில் ஆலோசனை கூட்டம் : கமல்
14 மே, 2018 - 15:56 IST
சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், மக்கள் நீதி மைய கட்சி தலைவருமான கமல், காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.
இதில் கட்சிகளை கடந்தும், இளைஞர்கள், ஆர்வலர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். காவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம். காவிரி பிரச்னை மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்க வேண்டும்.
காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் யார் முதல்வராக வந்தாலும் அவரை சந்தித்து பேச உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும் என்றார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment