5/16/2018 1:46:06 PM
ஸ்ரீதேவி, போனிகபூர் தம்பதிகளின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். ஆனாலும் தாய் ஸ்ரீதேவியின் மரணம் அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. வீட்டில் இருக்கும்போது சோகமாக தென்பட்டாலும் வெளியிடங்களிலும், படப்பிடிப்பிலும் சகஜமாகவே காணப்படுகிறார். சமீபத்தில் அன்னையர் தினம் வந்தது. அன்றைய தினம் அவர் இணைய தளத்தை திறந்தபோது அன்னையர் தின வாழ்த்துக்களாக குவிந்திருப்பதை கண்டு கண்கலங்கினார். தாய் ஸ்ரீதேவியின் ஞாபகம் அவரை வாட்டத் தொடங்கியது. உடனே தனது சிறுவயது ஆல்பத்தை புரட்டத் தொடங்கினார். அதில் தான் 6 வயது குழந்தையாக இருந்தபோது ஸ்ரீதேவி தன்னை அரவணைத்து அன்பு பாராட்டி மகிழ்ந்த புகைப்படத்தை தேர்வு செய்து தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். ஆனால் அதில் எந்த மெசேஜும் வெளியிடவில்லை. சில சமயம் மவுனமே மனத்தின் கனத்தை உணர்த்தும் என்பதால் அப்படிவிட்டிருப்பார் என தெரிகிறது. ஜான்வியின் அம்மா ஞாபகத்தை கண்டு அவரது ரசிகர்கள் ஏகத்துக்கு லைக் போட்டிருந்ததுடன் பலர் அவருக்கு ஆறுதல் கூறி பதில் டுவிட் செய்திருந்தனர்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment